ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும் – செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!
நித்தமும் ஊடகக்காரர்களை நெருடும் நித்தியானந்தா (2010-2016): 2010ல், +2 தேர்வுகள் சமயத்தில் சன்-குழுமம் டிவி-செனல்கள், நித்தியானந்தாவின் செக்ஸ் வீடியோக்களை 24 x 7 ரீதியில் போட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தன. கோபாலன் தனது “நக்கீரனில்” தனக்கேயுரிய பாணியில் கொக்கோக புலன்விசாரணை செய்து, பாலியல் செய்திகளை போட்டு, செக்ஸ்-வீடியோக்களை இணைதளத்தில் பரப்பி வந்தார். இந்த இரண்டு வியாபார நிருவனங்களுக்கும் விளம்பரம் அதிகமாகவே கிடைத்தன. நக்கீரன் இதழ் ஒன்று ரூ.100/- வரை விற்றது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விழித்துக் கொண்ட நித்தியானந்தா, முதலில் “நான் அவனில்லை” என்று ஆரம்பித்து, “நான் ஆணே இல்லை” வரை வாதித்துப் பார்த்தார். எப்படி லெனின் முதல் சன்-குழுமம் வரை பணம் கேட்டு தம்மை மிரட்டியதாகவும், கொடுக்காதல்லால் தான் அவ்வாறு விடியோ, படம், செய்திகள் என்று போட்டு பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவித்தார். ஆனால், அவரை ஊடகங்கள் விடவில்லை. இன்று வரை, எதிர்மறையாகத்தான் விவரித்து வருகின்றன. ஆனால், விஜயவாடாவில், ஒரு கத்தோலிக்க பாதிரி சம்பந்தப்பட்டது, சிடி வெளியானது முதலியவற்றை தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.
கிருத்துவ–முகமதிய சாமியார்களின் செக்ஸ் லீலைகள் மறைக்கப்படுகின்றன: இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கிருத்துவர்கள் அதிகமாகவும், முகமதியர்கள் அவர்களை விட கொஞ்சம் குறைவாகவும் அத்தகைய செக்ஸ்-லீலைகளில் ஈடுபட்டு வந்தாலும், பற்பல் பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள், காஜிக்கள், மௌலிகள், சாமியார்கள் மாட்டிக் கொண்டாலும், விவகாரத்தை செய்திகள் மட்டும் போட்டு, அப்படியே விட்டுவிடுவதை வழக்கமாக ஊடகக்காரர்கள் கொண்டுள்ளனர். அதன்படியே, அப்படியே அமுக்கி வாசித்து விட்டு விட்டனர். நிறைய விவகாரங்கள் மறைக்கப்படுகின்றன. ஆனால், நித்தியானந்தாவை அதே ஊடகங்கள் விடுவதில்லை, விடவில்லை. இப்பொழுது 10-03-2016 மற்றும் 11-03-2016 தேதிகளில் காளஸ்தி மற்றும் திருமலை கோவிலுக்குச் சென்ற வரை, துரத்திச் சென்று செய்திகள், படங்கள், விடீயோக்கள் என்று போட்டு கலக்கி வருகின்றன. “நித்தியானந்தா ரஞ்சிதா உடன் சென்ற வீடியோ” என்று தலைப்பிட்டு செய்திகளைப் போட்டு வருகின்றன. [1]. “செக்ஸ் விவகாரத்தில் மாட்டிய நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் புதிய கோலத்தில் திருமலைக்குச் செல்கும் வீடியோவைப் பாருங்கள்”, என்று தலைப்பிட்டு “ஜீ-டிவி” செய்தி வெளியிட்டுள்ளது[2]. அதாவது தலைப்பிலேயே அத்தனை குசும்புத்தனம், தூஷண காழ்ப்பு முதலியவை தொக்கி நிற்கின்றன[3]. அதாவது, ஏதோ கோவிலுக்குப் போக தகுதியற்ரவர்கள் எல்லாம் போகிறார்கள் என்ற தோரணியில் விரசமாக, விகல்பமாக செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
போர்னோகிராபியில் மாட்டிக் கொண்ட விஜயவாடா–குணடாலா பாதிரியார் (மார்ச்.10-14, 2016): அதே நேரத்தில், அதே தேதிகளில் விஜயவாடாவில் உள்ள குணடாலா என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க, மேரி மாதா சர்ச்சில் வேலை பார்க்கும் ஒரு பாதிரி போர்னோகிராபி சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்டு, ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்ட செய்திகள், ஆங்கில ஊடகங்களில் இலேசாக கொஞ்சம்-கொஞ்சமாக வந்துள்ளன. அதிலும் அவை அளந்தே செய்திகளைக் கொடுத்துள்ளன. வழக்கம் போல “தி இந்து” அந்த சர்ச்சின் பெயர், இடம், மாட்டிக் கொண்ட கத்தோலிக்க பாதிரியின் பெயர் முதலிவயவற்றைக் குறிப்பிடவில்லை. ஆனால், “டைம்ஸ் ஆப் இந்தியா” மட்டும் விஜயவாடாவில் உள்ள குணடாலா என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க, மேரி மாதா சர்ச் என்று வெளியிட்டுள்ளது. இதில் பத்திரிக்கையாளர் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட 11 பேர் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர். மார்ச். 10, 11 மற்றும் 12 தேதிகளில் இவர்கள் பிடிபட்டனர். அதாவது, நித்தியானந்தா கோவில்களுக்கு சென்ற அதே தேதிகளில் இந்நிகழ்ச்சிகள் ஆந்திராவில் நடந்துள்ளன. ஆனால், தமிழ் ஊடகங்கள் நித்தியானந்தாவைத் தான் பிடித்துக் கொண்டனவே தவிர அந்த கத்தொலிக்க செக்ஸ் சாமியாரை விட்டுவிட்டன. அவர்களுக்கு விஜயவாடா தூரம், திருப்பதி அருகில் போல. அவருக்கு தொடர்பில்லை என்றால், ரூ. ஒரு கோடிக்கும் மேலாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
போர்னோகிராபியில் மாட்டிக் கொண்ட பாதிரியார் பணம் கொடுத்துத் தப்பித்துக் கொண்டது (மார்ச்.10-14, 2016): அப்பாதிரி செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்ட பிறகு, குணடாலா சர்ச் அதிகாரம் அவரது செக்ஸ் விவகாரங்களை விசாரிக்க ஆரம்பித்தது[4]. ரூ. ஒரு கோடிக்கும் மேலாக பணாம் கொடுத்தது, அவரது மீதான சந்தேகம் வலுவானது. சம்பந்தப்பட்ட பாதிரி பணம் கொடுத்து மாளாததால், போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதனால், 12-03-2016 சனிக்கிழமை அன்று போலீஸார் விசாரித்து 11 பேரைப் பிடித்தனர்[5]. விஜயவாடா போலீஸ் கமிஷனர், டி. கௌதம் சவாங், அந்த கும்பல், இந்த பாதிரியிடம் மிரட்டிப் பணம் பறித்தது உண்மைதான். பாதிரி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற ஆபாசப் படம் அவர்களில் இருப்பதாகவும், அதனை வெளியிடத் தடுப்பதற்குத்தான் பணம் கொடுத்து மிரட்டியுள்ளதாகவும், தாங்கள் எல்லா கோணங்களிலும் இவ்வழக்கை விசாரித்து வருவதாகவும் கூறினார்[6]. போர்னோகிராபி பணம் எடுத்த கும்பல், இவரை மிரட்டி பணம் கேட்டு வந்தது. பாதிரியாரும், ரூ. ஒரு கோடிக்கும் மேலாக பணம் கொடுத்து, தப்பித்துக் கொண்டுள்ளார். அதாவது, அந்த சிடியை வெளியிடக்கூடாது என்றால், பணம் கேட்டதால், பணம் கொடுத்து தனது செக்ஸ்-விவகாரத்தைதி மறைக்க முய்ன்றுள்ளார்.
பாதிரி ஏற்கெனவே நிதி மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்: அப்பாதிரியைப் பற்றி விசாரித்து வரும் சர்ச் அதிகாரம், அவரது நடவடிக்கை மற்றும் வருமானம் பற்றி ஆராய்ந்து வருகிறது. சர்ச்சிற்கு மற்றும் ஏழைகளுக்கு உதவ ஒதுக்கப்பட்ட பணத்தை அவர் முறைதவறி உபயோகப்படுத்தியுள்ளதாக தெரிந்து கொண்டது[7]. போலீஸாரும், அந்த ஆபாச விடியோ மற்றும் சிடி பற்றி விசாரித்து வருகின்றனர். அது உண்மையிலேயே நடந்த சமாச்சாரமா- இல்லையா, அப்படியே இருந்தாலும், அதில் சம்பந்தப்பட்டுள்ள பெண் யார், அவள் அத்தகைய வீடியோவில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டாள், யார் அந்த விடியோவை எடுத்தது, எங்கு-யார்-எப்படி எடுத்தார்கள் முதலிவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இதில், சில ஊடகக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களிடம் அத்தகைய விடீயோவின் நகல்கள் சிடிக்களில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களும், அதை டிவி-செனல்களில் ஒலி-ஒளிபரப்பாமல் இருக்க, அப்பாதிரியிடமிருந்து பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளன. இதற்குள் சர்ச் நிர்வாகம் அப்பதிரியை நீக்கி வேறு பாதிரியை நியமிக்க முடிவு எடுத்துள்ளது[8].
‘கால் மணி செக்ஸ் ராக்கெட்’ மோசடிக்கும் இப்பாதிரிக்கும் தொடர்பு உள்ளதா?: ஆந்திர மாநிலத்தில் ‘கால் மணி’ விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. பணத் திண்டாட்டத்தில் இருப்பவர்கள், போன் செய்தால்போதும், வீட்டிற்கு வந்து பணம் அளிக்கப்படுகிறது. கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி வசூல் செய்ததோடு, கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மனைவி உள்பட வீட்டில் உள்ள பெண்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளிய அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள், போலீஸ் உள்பட உயரதிகாரிகள் மற்றும் குண்டர்கள் இணைந்து ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து, ஆந்திராவில் தற்போது இந்த பிரச்னை பெரிய அளவில் வெடித்துள்ளது[9]. ஆந்திர பிரதேச மாநில சட்டசபை கூட்டத்தொடர் ஐதராபாத்தில் டிசம்பர் 8.2015 அன்று காலை நடந்தது. அப்போது நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா எழுந்து பேசுகையில், விஜயவாடா பகுதியில் கந்து வட்டி கொடுமை / ‘கால் மணி செக்ஸ் ராக்கெட்’ என்ற பெயரில் நடக்கும் சட்ட விரோத இந்த பண அழைப்பு கொடுமை நடக்கிறது[10]. அப்போது குடும்ப பெண்களிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பின்னர் பணத்தை தராதவர்களின் வீட்டில் உள்ள பெண்களை விபசாரத்துக்கு கட்டாயப்படுத்துகின்றனர். அது பற்றி முதலில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்[11]. ஆனால், ஆந்திர அரசியல்வாதிகள், பெரிய புள்ளிகள் முதலியோர் சம்பந்தப்பட்டதால் அமுக்க முயற்சி செய்யப்பட்டது[12]. அந்நிலையில் இப்பாதிரியும் சம்பந்தப்பட்டது, சர்ச்சுக்கு சாதகமாகி விட்டது, அதாவது, விசயம் அமுக்கப்பட்டு விடும் என்று நன்றாகத் தெரிந்து விட்டது.
© வேதபிரகாஷ்
15-03-2016
[1] http://v6news.tv/swami-nithyananda-visits-tirumala-tirupathi-temple-teenmaar-news
[2] zee.Tv.news, Watch: Swami Nithyananda and Ranjitha, once embroiled in sex scandal, visit Tirumala in new look, Last Updated: Saturday, March 12, 2016 – 16:39
[3] http://zeenews.india.com/news/india/watch-swami-nithyananda-and-ranjitha-once-embroiled-in-sex-scandal-visit-tirumala-in-new-avatar_1864969.html
[4] The times of India, Catholic priest case: 11 persons taken into custody, Phanindra Papasani | TNN | Mar 13, 2016, 12.36 AM IST.
[5] http://timesofindia.indiatimes.com/city/vijayawada/Catholic-priest-case-11-persons-taken-into-custody/articleshow/51376906.cms
[6] The Hindu, Priest, blackmailed by gang, paid hefty amount, says CP, by Rajulapudi srinivas, Vijayawada, March.14, 2016; Updated: March 14, 2016 05:46 IST.
[7] http://www.thehindu.com/news/cities/Vijayawada/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp/article8351138.ece
[8] http://www.nyoooz.com/vijayawada/389661/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp
[9] http://www.vikatan.com/news/india/56544-one-year-ban-for-actress-roja-to-enter-assembly.art
[10] தினத்தந்தி, ஆந்திரா சட்டசபையில் நடிகை ரோஜாவுக்கு ஒரு ஆண்டு தடை சந்திரபாபு நாயுடுவை விமர்சித்ததாக குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 19,2015, 4:12 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 19,2015, 4:15 AM IST.
[11] http://www.dailythanthi.com/News/India/2015/12/19041211/Andhra-PradeshIn-assemblyActress-rojaOne-yearBan.vpf
[12] http://www.punemirror.in/news/india/Moneylenders-force-women-into-sex-trade-grab-land-of-defaulters-in-Vijayawada/articleshow/50164306.cms