ஜூலை முதல் நவம்பர் வரை “உலக தமிழ் நீதிமன்றம்” உறுப்பினர் கைது, விசாரணை, என்.ஐ.ஏ. ஏற்பு, விசாரணை, குற்றப்பத்திரிக்கைதாக்கல்! (2)
என்ஐஏவுக்கு மாற்றுவதில் தாமதம்: “அவர்களை ஆகஸ்ட் 7- ஆம் தேதி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர். அதன்பிறகு இந்த சம்பவத்தில் மேலும் முன்னேற்றம் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர்,” என்று மேலே ஏற்கெனவே குறிப்பிடப் பட்டது. கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கை கடந்த ஜூலை 27ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது[1]. அதாவது,பிரச்சினை பெரிதாகும் எனும்பொழுது, இப்படி வழக்குகளை மாற்றி விடும் போக்கும் புலப்படுகிறது. இவ்வாறு மூன்றாம் நிலையில், செல்லும்போது, ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் செல்லுமா, அவற்றில் ஏதாவது தேக்கம் இருக்குமா என்று தெரியவில்லை. விசாரிக்கும் அதிகாரிகள் மாறும்போதும், இடையில் அல்லது தாமதம் ஏற்படும் பொழுதும், சிக்கிக் கொண்டவர்கள், அவர்களின் கூட்டாளிகள், உதவி செய்தவர்கள் உஷாராகி விடலாம், இருக்கும் ஆதாரங்களை மறைக்க-அழிக்க முற்படலாம். ஆகஸ்டில் அவர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்[2]. LTTE தொடர்பு கொண்ட இவர்கள், வாணிக வளாகங்கள் மற்றும் தலைவர்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.
புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்த இளைஞர்: தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இயற்கையை அழிக்கும் விதமாக சேலம் மாவட்டம் ஊத்துமலை அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது[3]. அதற்குச் செல்லும் லாரியில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது[4]. மேலும், இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில், துப்பாக்கி தயாரித்ததாகவும், சாமானிய மனிதனில் இருந்து நீதிபதிகள் வரை தவறுகள் நடப்பதால், மனித மாண்புகளையும், இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காப்பதற்கு இருவரும் ஒன்று சேர்ந்ததாகவும் கூறியுள்ளனர்[5]. காப்பது-அழிப்பது என்று எதிர்-எதிரான முரண்பாடுள்ள சித்தாந்தம் கொண்டுள்ளதையும் கவனிக்கலாம். வன்முறையின் மூலம் தீர்வு காணலாம் போன்ற சித்தாந்தம், நக்சலைட், மாவோயிஸ்ட், லெனினிஸ்ட் போன்ற சித்தாந்த கூட்டங்களிடம் தான் காணப் படுகிறது. மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில், சாமானிய மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்[6]. சேலத்தில் துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் கைதான 3 பேர் மீதும் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது[7]. அதில் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளனர்[8].
11-11-2022 – என்ஐஏ குற்றப்பத்திரிக்கை – அதில் கூறியிருப்பதாவது: புளியம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் 2 பேரிடம் இருந்து 2 நாட்டு கைத்துப்பாக்கி, வெடிமருந்து, துப்பாக்கி பவுடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது[9]. யு-டியூப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்தனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. பிறகு, வெடிப்பொருட்கள் எப்படி, வெளிப்படையாக, விற்கப் படுகின்றன, அவை இத்தகைய நபர்களுக்குக் கிடைக்கிறது என்பதும் கவனிக்க வேண்டும். குவாரிகளுக்கு, வெடி மருந்துகள் விறகப் படுகின்றன. அவை, ஒருவேளை இவர்களுக்குக் கிடைக்கிறது போலும். சாதாரணமாக சில குறிப்பிட்ட மருந்துகளே எல்லோருக்கும் விற்கப் படுவதில்லை. மருத்துவர் சீட்டு, ஒப்புதல் இல்லாமல் வாங்கவும்-விற்கவும் முடியாது. அந்நிலையில், இத்தகைய பொருட்கள் கிடைக்கின்றன என்றால், அவையும் கண்காணிக்கப் பட வேண்டியுள்ளது. இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன், விடுதலைப்புலிகளை போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினர்[10]. குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் சதி செய்து தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளுடன் இணைந்து ‘உலகத்தமிழ் நீதி நீதிமன்றம்’ [World Tamil Justice Court (WTJC)] என்ற அமைப்பை உருவாக்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது[11]. இத்தகைய தீவிரவாத எண்ணம் கொண்டு உருவாக்கும் கொள்கைகளுடன் தமிழை ஏன் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. குவாரிகள், கிரஷர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் வேலை செய்பவர்களை சட்டவிரோமாக துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் தாக்கி, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்[12].
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை குறிக்கும் 2022 மே 18 அன்று வேலை நிறுத்தத்தை தேர்ந்தெடுத்தனர்: இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கை தமிழ் மக்களாலும், விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாலும் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை குறிக்கும் 2022 மே 18 அன்று வேலை நிறுத்தத்தை தேர்ந்தெடுத்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாத செயல்கள் மக்களிடையே அச்சத்தை பரப்பும் என்றும், விடுதலைப்புலிகள் மாதிரியான அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக புத்துயிர் பெற்று உயிர்தெழப்பட்டது என்ற வலுவான செய்தியை, பொதுமக்களுக்கும் அரசுக்கும் அனுப்பும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பினர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் கைதான 3 பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் 11-11-2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
© வேதபிரகாஷ்
13-11-2022.
[1] தினமணி, துப்பாக்கி தயாரித்த வழக்கு: சேலம் இளைஞா்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை, By DIN | Published On : 26th August 2022 11:39 PM | Last Updated : 26th August 2022 11:39 PM
[2] https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2022/aug/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F–%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3905380.html
[3] தமிழ்.இந்து, சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 இளைஞர்கள்: என்ஐஏ தீவிர சோதனை, வி.சீனிவாசன், Published : 07 Oct 2022 07:36 PM; Last Updated : 07 Oct 2022 07:36 PM.
[4] https://www.hindutamil.in/news/crime/879742-two-youths-held-for-making-weapons-from-youtube-tutorials.html
[5] நியூஸ்18தமிழ், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? சேலத்தில் துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை…,NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 07, 2022, 14:39 IST.
[6] https://tamil.news18.com/news/tamil-nadu/nia-officers-raid-in-salem-in-youngster-gun-product-case-815078.html
[7] தினகரன், சேலத்தில் உலகத்தமிழ் நீதி நீதிமன்றம் அமைப்பை உருவாக்கி ஆயுத போராட்டம் நடத்த திட்டம்: துப்பாக்கி தயாரித்த 3 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல், 2022-11-12@ 00:40:30 .
[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=813537
[9] இ.டிவி.பாரத், நாட்டு துப்பாக்கி தயாரித்த விவகாரம்: சேலம் அருகே என்ஐஏ சோதனை, Published on October 7, 2022, 12:31 PM IST.
[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/case-of-local-made-guns-nia-raids-near-salem/tamil-nadu20221007123147378378889
[11] புதியதலைமுறை, சேலம்: யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது,ச. முத்துகிருஷ்ணன், Published : 01,Jun 2022 01:50 PM
[12] https://www.puthiyathalaimurai.com/newsview/140437/Salem:-Youths-arrested-for-making-guns-by-watching-YouTube!