Archive for the ‘பயங்கரவாதி’ Category

ஜூலை முதல் நவம்பர் வரை “உலக தமிழ் நீதிமன்றம்” உறுப்பினர் கைது, விசாரணை, என்.ஐ.ஏ. ஏற்பு, விசாரணை, குற்றப் பத்திரிக்கை தாக்கல்! (2)

நவம்பர்13, 2022

ஜூலை முதல் நவம்பர் வரை “உலக தமிழ் நீதிமன்றம்” உறுப்பினர் கைது, விசாரணை, என்... ஏற்பு, விசாரணை, குற்றப்பத்திரிக்கைதாக்கல்! (2)

என்ஐஏவுக்கு மாற்றுவதில் தாமதம்:  “அவர்களை ஆகஸ்ட் 7- ஆம் தேதி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர்அதன்பிறகு இந்த சம்பவத்தில் மேலும் முன்னேற்றம் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர்,” என்று மேலே ஏற்கெனவே குறிப்பிடப் பட்டது. கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கை கடந்த ஜூலை 27ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது[1]. அதாவது,பிரச்சினை பெரிதாகும் எனும்பொழுது, இப்படி வழக்குகளை மாற்றி விடும் போக்கும் புலப்படுகிறது. இவ்வாறு மூன்றாம் நிலையில், செல்லும்போது, ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் செல்லுமா, அவற்றில் ஏதாவது தேக்கம் இருக்குமா என்று தெரியவில்லை. விசாரிக்கும் அதிகாரிகள் மாறும்போதும், இடையில் அல்லது தாமதம் ஏற்படும் பொழுதும், சிக்கிக் கொண்டவர்கள், அவர்களின் கூட்டாளிகள், உதவி செய்தவர்கள் உஷாராகி விடலாம், இருக்கும் ஆதாரங்களை மறைக்க-அழிக்க முற்படலாம். ஆகஸ்டில் அவர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்[2]. LTTE தொடர்பு கொண்ட இவர்கள், வாணிக வளாகங்கள் மற்றும் தலைவர்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்த இளைஞர்: தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இயற்கையை அழிக்கும் விதமாக சேலம் மாவட்டம் ஊத்துமலை அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது[3]. அதற்குச் செல்லும் லாரியில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது[4]. மேலும், இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில், துப்பாக்கி தயாரித்ததாகவும், சாமானிய மனிதனில் இருந்து நீதிபதிகள் வரை தவறுகள் நடப்பதால், மனித மாண்புகளையும், இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காப்பதற்கு இருவரும் ஒன்று சேர்ந்ததாகவும் கூறியுள்ளனர்[5]. காப்பது-அழிப்பது என்று எதிர்-எதிரான முரண்பாடுள்ள சித்தாந்தம் கொண்டுள்ளதையும் கவனிக்கலாம். வன்முறையின் மூலம் தீர்வு காணலாம் போன்ற சித்தாந்தம், நக்சலைட், மாவோயிஸ்ட், லெனினிஸ்ட் போன்ற சித்தாந்த கூட்டங்களிடம் தான் காணப் படுகிறது. மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில், சாமானிய மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்[6]. சேலத்தில் துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் கைதான 3 பேர் மீதும் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது[7]. அதில் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளனர்[8].

11-11-2022 – என்ஐஏ குற்றப்பத்திரிக்கைஅதில் கூறியிருப்பதாவது: புளியம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் 2 பேரிடம் இருந்து 2 நாட்டு கைத்துப்பாக்கி, வெடிமருந்து, துப்பாக்கி பவுடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது[9]. யு-டியூப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்தனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. பிறகு, வெடிப்பொருட்கள் எப்படி, வெளிப்படையாக, விற்கப் படுகின்றன, அவை இத்தகைய நபர்களுக்குக் கிடைக்கிறது என்பதும் கவனிக்க வேண்டும். குவாரிகளுக்கு, வெடி மருந்துகள் விறகப் படுகின்றன. அவை, ஒருவேளை இவர்களுக்குக் கிடைக்கிறது போலும். சாதாரணமாக சில குறிப்பிட்ட மருந்துகளே எல்லோருக்கும் விற்கப் படுவதில்லை. மருத்துவர் சீட்டு, ஒப்புதல் இல்லாமல் வாங்கவும்-விற்கவும் முடியாது. அந்நிலையில், இத்தகைய பொருட்கள் கிடைக்கின்றன என்றால், அவையும் கண்காணிக்கப் பட வேண்டியுள்ளது. இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன், விடுதலைப்புலிகளை போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினர்[10]. குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் சதி செய்து தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளுடன் இணைந்து ‘உலகத்தமிழ் நீதி நீதிமன்றம்’ [World Tamil Justice Court (WTJC)] என்ற அமைப்பை உருவாக்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது[11]. இத்தகைய தீவிரவாத எண்ணம் கொண்டு உருவாக்கும் கொள்கைகளுடன் தமிழை ஏன் இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை. குவாரிகள், கிரஷர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் வேலை செய்பவர்களை சட்டவிரோமாக துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் தாக்கி, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்[12].

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை குறிக்கும் 2022 மே 18 அன்று வேலை நிறுத்தத்தை தேர்ந்தெடுத்தனர்: இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கை தமிழ் மக்களாலும், விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாலும் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை குறிக்கும் 2022 மே 18 அன்று வேலை நிறுத்தத்தை தேர்ந்தெடுத்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாத செயல்கள் மக்களிடையே அச்சத்தை பரப்பும் என்றும், விடுதலைப்புலிகள் மாதிரியான அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக புத்துயிர் பெற்று உயிர்தெழப்பட்டது என்ற வலுவான செய்தியை, பொதுமக்களுக்கும் அரசுக்கும் அனுப்பும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பினர். மேலும் தொடர்ந்து விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் கைதான 3 பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் 11-11-2022 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

13-11-2022.


[1] தினமணி, துப்பாக்கி தயாரித்த வழக்கு: சேலம் இளைஞா்களிடம் என்... விசாரணை, By DIN  |   Published On : 26th August 2022 11:39 PM  |   Last Updated : 26th August 2022 11:39 PM

[2] https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2022/aug/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F–%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3905380.html

[3] தமிழ்.இந்து, சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 இளைஞர்கள்: என்ஐஏ தீவிர சோதனை, வி.சீனிவாசன், Published : 07 Oct 2022 07:36 PM; Last Updated : 07 Oct 2022 07:36 PM.

[4] https://www.hindutamil.in/news/crime/879742-two-youths-held-for-making-weapons-from-youtube-tutorials.html

[5] நியூஸ்18தமிழ், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? சேலத்தில் துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை,NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 07, 2022, 14:39 IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/nia-officers-raid-in-salem-in-youngster-gun-product-case-815078.html

[7] தினகரன், சேலத்தில் உலகத்தமிழ் நீதி நீதிமன்றம் அமைப்பை உருவாக்கி ஆயுத போராட்டம் நடத்த திட்டம்: துப்பாக்கி தயாரித்த 3 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல், 2022-11-12@ 00:40:30 .

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=813537

[9] இ.டிவி.பாரத், நாட்டு துப்பாக்கி தயாரித்த விவகாரம்: சேலம் அருகே என்ஐஏ சோதனை, Published on October 7, 2022, 12:31 PM IST.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/case-of-local-made-guns-nia-raids-near-salem/tamil-nadu20221007123147378378889

[11] புதியதலைமுறை, சேலம்: யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது,ச. முத்துகிருஷ்ணன், Published : 01,Jun 2022 01:50 PM

[12] https://www.puthiyathalaimurai.com/newsview/140437/Salem:-Youths-arrested-for-making-guns-by-watching-YouTube!

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

மே20, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

இந்திய பிரஜைகள், இந்திய நாட்டு நலனுக்காக, இப்பொழுதுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்க் கொண்டு, இவ்வாறான, தேசவிரோத சக்திகள் எப்படி செயல்படுகின்றன என்பதனை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். இதில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று மொழிரீதியாக எந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கலாகாது. தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் இப்படிச் சொல்லியே விஷயத்தைத் திசைத் திருப்பும் போக்கிலும் உள்ளார்கள். ஏனெனில் தீவிரவாதிகள் அவற்றையும் கடந்து தான் மக்களைக் கொன்று வருகின்றனர். ஆனால், அக்காரணிகளை வைத்துக் கொண்டி அதே அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

LTTE_tourist_hub Sri Lankaசெபாஸ்டியன் சீமான் அமெரிக்க அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரங்கள்: நவம்பர் 2011ல் சீமான் உலக தமிழ் அமைப்பு [World Tamil Forum at New York] சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்தபோது, நியூயார்க் விமான நிலையத்திலிருந்து திரும்ப அனுப்பட்டார்[1]. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள எல்டிடிஇ இயக்கத்திற்கு சார்பாக அவரது நடவடிக்கைகள் உள்ளதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னர் அவர் அமெரிக்காவில் 10 நாட்கள் இருப்பதற்காக உரிய அனுமதி, விசா முதலியவற்றைப் பெற்றுக் கொண்டுதான் சென்றிருந்தார். ஆனால், பிறகு இம்மிக்ரேஷன் டிபார்ட்மென்ட் சோதனையில் அவரது பின்னணி அறியப்பட்டு, அவரை அனுமதித்தால் அமைதிக்குக் குந்தகம் நேர வாய்ப்புள்ளது[2] என்று தெரியவந்ததால் அவ்வாறு மறுக்கப்பட்டதாக அறிவித்தனர்[3]. உலக தமிழ் அமைப்பு என்றால் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் நலனுக்காக ஒருமித்த நிலையில் செயல்பட வேண்டும். பிறகு அவர்கள் எப்படி இப்படி தேசவிரோதக் கொள்கையாளர்களுக்கு இடம் கொடுக்க முற்பட்டார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறான நிலை ஏற்படும் என்று அறிந்துள்ளப் பட்சத்தில், இத்தகைய நிகழ்வுகளை தாராளமாக தவித்திருக்கலாம். ஏனெனில், நாளைக்கு தமிழர் என்று யாராவது செல்லும் போது, அமெரிக்கர்கள் சந்தேகத்துடன் பார்ர்க்கக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

Hindu temples misused for LTTE activities - Canada - literature saleசெபாஸ்டியன் சீமான் கனடா அரசாங்கத்தினால் நாடு கடத்தப் பட்ட விவகாரங்கள்: கனடா நெடுங்காலமாகவே, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் தமிழ் தீவிரவாதிகளின் இருப்பிடமாக இருந்து வந்துள்ளது. இலங்கை அகதிகள் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக எல்லைகள் கடந்து வந்து சேருகின்றனர். டோரோன்டோ என்ற நகரத்தில் தமிழர்களின் செயல்பாடுகள் காணப்படுகின்றன. நிச்சயமாக, எல்லா தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் இந்தியா வம்சாவளியினர் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும், இலங்கையைச் சேர்ந்தவர் மற்ற சித்தாந்திகள் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. நவம்பர் 2009ல் டோரோன்டோவில் எல்டிடிஇ ஆதரவு என்ற நிலையில் ஶ்ரீலங்காவிற்கு எதிராக செபாஸ்டியன் சீமான் பேசியதால், கனடா அரசாங்கம், அவரை நாடு கடத்தியது[4]. ஏப்ரல் 2012ல் ரமணன் மயில்வாகனம் என்ற கனடா நாட்டுப் பிரஜை, அமெரிக்க நீதிமன்றத்தினால் 15 ஆண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது[5]. அதாவது, எப்படி கனடா-அமெரிக்கா தமிழ் பேசும் மக்களால் துஷ்பிரயோகப்படுத்தப் பட்டு, தமிழருக்குக் கெட்டப் பெயரை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொடுக்கப்படுகிறது.

Hindu temples misused for LTTE activities - Canadaடோரோன்டோ இந்து கோயில்கள் எல்டிடிஇ  நிதிவிநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன: ஆனால் அதே டோரோன்டோவில் உள்ள இந்து கோயில்கள் எல்டிடிஇ பிரச்சாரத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன என்பது மட்டும் அல்லாது கோயில் பெயரில் பணம் வசூல் செய்து அது எல்டிடிஇ மற்றும் இதர இயக்கத்தினருக்கு அனுப்பப் பட்டு வந்தது. நிச்சயமாக இந்துக்கள் இவ்வாறு செய்திருக்க முடியாது. ஆனால், திராவிட சித்தாந்தத்தில் மூளை சலவை செய்யப்பட்டு, இந்துவிரோத சக்திகளுடன் சேர்ந்து, உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட்டால், “இந்துக்கள்ளென்ற போர்வையில் மற்றவர்கள் இக்காரியங்களைச் செய்யலாம். இதில் செபாஸ்டியன் சீமானும் அடக்கம். இதில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அம்மாதிரியான பணப்போக்குவரத்துகள் செய்துள்ளார்கள். அதாவது இந்து கோயில்கள் கிறிஸ்தவர்களினால், தேசவிரோதச் செயல்களுக்கு உப்யோகப் படுத்தி கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இதனால், அக்கோயில்கள் கனடா அரசாங்கத்தினால் தண்டம் செல்லுத்தப்பட வேண்டியதாயிற்று[6]. ரிச்மான்ட் ஹில் ஹிந்து டெம்பிள் மற்றும் ஹிந்து மிஷன் மிசிசௌகா என்ற இரண்டு கோயில்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டன[7].

Hindu temples misused for LTTE activities - Canada - Hundi collectionசெபாஸ்டியன் இந்தியாவில் தேசவிரோத செயல்களுக்காக கைது செய்யப் பட்டது: சரி, மற்ற நாடுகளில் பிரச்சினை செய்து வரும் இந்த ஆள் தமிழகத்தில் என்ன செய்கிறார் என்றால், அதே மாதியான போக்குத்தான் காணப்படுகிறது. தேசவிரோத பேச்சுகளுக்காக, இரண்டு முறை ஜூலை 2010 மற்றும் பிப்ரவரி 2009 தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்[8]. மே.18, 2010ல் “நாம் தமிழர்” என்ற இயக்கம் இவரால் உண்டாக்கப்பட்டது[9]. எல்டிடிஇன் நிதியுதவி மூலம் இந்தியாவில் இவ்வாறு குறிப்பாக தமிழ்நாட்டில், கருணாநிதி, வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோருக்குக் கிடைப்பதாகவும், அதனால் தேர்தல் அல்லது நிதி ஆதாயத்திற்காக அவர்கள் அவ்வாறு பேசி வருவதாக இலங்கை அரசு குற்றஞ்ச்சாட்டுகிறது[10]. ஜெயராம் என்ற மலையாள நடிகர், சினிமாவில் ஒரு தமாஷா காட்சியில் ஒரு தமிழ் பெண்ணை இழிவு படுத்தி பேசுவதாக வந்த காட்சியினால், சென்னையில் உள்ள அவரது வீடு தாக்கப் பட்டது. அதற்காக, செபாஸ்டியன் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீடர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் செபாஸ்டியன் சீமானும் மறைந்திருந்து, பிறகு பெயில் பெற்றார்[11].

Hindu temples misused for LTTE fundingதமிழ் அமைதிக்காக உபயோகப்படுத்தப் படவேண்டும்: தமிழ் பேச்சாளியாக இருந்தால், அத்திறமை தமிழர்கள் நன்றாக இருக்க, சிறக்க, உபயோகப்படுத்த வேண்டும். உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாக, ஆபாசமாக, அசிங்கமாக, கொச்சையாக இந்தியா, இந்தியர்கள், இந்திய மதம் முதலியவற்றிற்கு எதிராகப் பேசுவது, நடந்து கொள்வது தகாது. இதனை தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். “யாது ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லிக் கொண்டு அமைதிக்கு ஊறுவிளைவித்துப் பேசினால், செயல்பட்டால் அது நன்மையாகாது. திராவிடப் பேச்சாளிகள் தமிழர்களை பேசிப்பேசியே பின் தள்ளிவிட்டனர். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், இந்தி பேசும் மாநிலங்களில் ஏன் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தி பேசுபவர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை” என்றெல்லாம் விதண்டாவாதம் பேசி, பிறகு “இந்தி பேசியே” பெரிய அரசியல்வாதிகள் ஆகி, மத்திய அமைச்சர்களாகவும் ஆகிவிட்டனர்.

Hindu temples funds diverted to LTTEசெபாஸ்டியன் சீமானுக்கு எதற்கு “ஆரிய-திராவிட” சித்தாந்தம்?: நாங்கள் “திராவிடர்கள்” அவர்கள் “ஆரியர்கள்” என்று சொல்லிக் கொண்டு, கூட்டு வைத்துக் கொண்டனர். இதெல்லாம் ஏன் எடுத்துக் காட்டப்படுகிறது என்றால், இந்த செபாஸ்டொயன் சீமானும் இந்த செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? தமிழர்களா, திராவிட சித்தாந்திகளா, கிறிஸ்தவர்களா?

© வேதபிரகாஷ்

20-05-2013


[1] Seeman, a pro-LTTE activist, was invited to attend a conference organised by the World Tamil Forum at New York. The film director had obtained all the necessary permissions and a visa from US authorities for his travel.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[3]  When Seema landed at New York, the authorities denied him permission to enter the country on the grounds that he is known for his “pro-LTTE activities”. The US authorities said if Seeman was permitted into the US, he would disrupt the peace of the land.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[5] The U.S. Department of Justice is seeking a 15-year prison sentence for a Canadian who pleaded guilty to terrorism conspiracy for his role in a plot to supply separatist rebels in Sri Lanka.

In a sentencing report filed in a Brooklyn, N.Y. court, U.S. attorney Loretta Lynch said Ramanan Mylvaganam had committed “a gravely serious offence” by attempting to procure equipment for the Tamil rebels.

http://news.nationalpost.com/2012/04/30/u-s-wants-15-years-for-toronto-man-convicted-in-tamil-tigers-terror-plot/

[7] The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberation Tigers of Tamil Eelam, or LTTE.

http://news.nationalpost.com/2012/06/04/two-toronto-hindu-temples-fined-by-cra-for-sending-money-to-suspected-tamil-tigers/

[8] Tamil Nadu Government has detained the film director and staunch supporter of LTTE, Sebastian Seeman under National Security Act (NSA). The Government of Tamil Nadu slapped NSA against Seeman, even as he was trying to secure bail after he was arrested early this week on charges of making inflammatory speech during a demonstration to condemn the attack on Tamil Nadu fishermen by the Sri Lankan Navy (July 2010). A day after the Principal Sessions Court dismissed Seeman’s bail plea (16-07-2010), the City Police Commissioner (In-charge) Sanjay Arora ordered his detention under NSA, stating that his speeches made during the agitation were against the interest of national security and disrupt harmony. After the Commissioner passed the order, Mr Bhaskar, Inspector of Police, North Beach Station, served the same to Seeman at Vellore Central Prison. Second time, Seeman was detained under the NSA by the Tirunelveli City Police in February 2009, but was released by the High Court later.

http://www.asiantribune.com/news/2010/07/18/pro-ltte-supporter-sebastian-seeman-booked-under-national-security-act

[10] In turn the LTTE is funding several Tamil Nadu politicians who are now lobbying the Central government in New Delhi. For example, Tamil Nadu politicians and film stars from Karunanidhi to Neduman and Vaiko and Seeman are continuing to support the LTTE either for electoral or for financial gain. They do not speak about 30 years of killings of Tamils by the LTTE from Duraiappa, the Mayor of Jaffna to Amirthalingam, the TULF leader or the Rajiv Gandhi assassination, but exaggerate the Tamil civilian deaths in the final phase and weep over Prabhakaran’s loss.

http://www.dailynews.lk/2013/02/20/fea03.asp

[11] In 2010, Chennai police registered a case against Seeman in connection with the attack on the house of actor Jayaram accusing him of instigating the attack on the actor, who allegedly made a comical derogatory remark on a Tamil woman in an interview. Eight persons were held soon after the attack and a special team investigating the case arrested four more later, including Seeman’s brother James Peter. Mr. Jayaram’s house was damaged after a group of youths threw stones and set on fire to the furniture at the main entrance. Seeman was initially absconding but later got anticipatory bail.