இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (1)
முன்னாள் அதிபர் கைது, கலவரங்கள் ஆரம்பம்: முன்னாள் அதிபர், 75 வயதாகும் ஜேக்கப் ஸூமா இந்த மாதம் 7-ஆம் தேதி (07—06-2021) கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரையில் வன்முறையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது [1]. கலவரம், வன்முறை, மற்றும் கடைகளை கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் / 1,200 பேருக்கும் மேற்பட்டோர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ரேடியோ நிலையம் கூட சூறையாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது [2]. ஜேக்கப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடங்கிய கலவரங்களை, கடைகளை சூறையாட வாய்ப்பாக சமூக விரோத கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன என தென்னாப்பிரிக்க அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது [3]. ஸூமா 2009 வருடம் முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது [4]. அவர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்4தில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் [5]. இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக கலவரங்கள் வெடித்தன [6].
மருத்துவ மனை எரியூட்டல், சாலைகளில் கலாட்டா முதலியன: டர்பனில் உள்ள லென்மன்ட் மருத்துவமனையை கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்[7]. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார்[8]. இவற்றிலிருந்து கலவரக் காரகளின் ஈவு-இரக்கமற்ற குணாதிசயங்களும், வக்கிரமும் வெளிப்படுகிறது. சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவர கலாட்டாக்களில் இந்திய வம்சாவளி போன்ற விவகாரம் இல்லை. நிறம் சம்பந்தப் பட்டப் பிரச்சினை இல்லை. ஏனெனில், இதில் தாக்கப் பட்டவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் எல்லோருமிருக்கின்றனர்.
இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு: இதனிடையே, ஸூமா பதவியில் இருந்தபோது அதுல் குப்தா உள்ளிட்ட பல இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள்தான் ஊழலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. இது இந்திய வம்சாவளி மக்கள் குறிவைத்து தாக்கப்பட்ட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. “தென்னாப்பிரிக்காவிலுள்ள முக்கிய நிறுவனங்களில், அதுவும் நிதி சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகிப்பது இந்தியர்கள்தாம். அவர்களால்தான் நமக்கு பொதிய வேலைவாய்ப்புகளும், பணமும் கிடைப்பதில்லை,” என்று தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கருதுவதாகச் சொல்லப்படுகிறது[9]. அதே நேரத்தில், “தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இந்தியர்களையே சாரும். பொருளாதார ரீதியாகத் தென்னாப்பிரிக்கா நாடு வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாக இருக்கும் இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பது சரியல்ல,” என்று இந்தியர்களுக்கு ஆதரவாகவும் தென்னாப்பிரிக்க மக்கள் சிலர் துணை நிற்கின்றனர்[10]. நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து, குடியுரிமைகளுடன் வாழும் இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு சரியில்லை.
இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன: தற்போது தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறைச் சூழலில், இந்திய வம்சாவளி மக்கள் நடத்தும் கடைகள், மருந்தகங்கள், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன[11]. வன்முறை கும்பல்கள் கடைகளை சூறையாடி பொருட்களை அள்ளிச் செல்வது மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி தீ வைப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன[12]. இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்துதாக்கப்படுகின்றன. அவர்களின் பணம், பொருட்கள் சூறையாடப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது, இப்படித்தான், தமிழ் ஊடகங்கள் விவரிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் சுமார் 6 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 75% பேர் கருப்பின மக்கள். 13% பேர் வெள்ளையின மக்கள். இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். இயல்பில் இந்திய மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். தொழிலை தெய்வமாக மதித்துப்போற்றி, சிக்கனமாக வாழக்கூடியவர்கள் என்பதால் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகமாக உள்ளனர். இதன் காரணமாக தற்போதைய வன்முறையில் இந்தியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, பகல் கொள்ளை அரங்கேறுகிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூ.512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருப்பு–வெள்ளை இனத்தவர்களிடம் இருதளைக்கொள்ளி எறும்பு போல வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினர்: மேலும் கருப்பின, வெள்ளையின மக்கள் என எந்த பக்கமும் சாராமல் இந்திய வம்சாவளியினர் தனித்து வாழ்கின்றனர். இதுவும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ் ஊடகங்கள் திரித்துக் கூறுவதும் விஷமத் தனமானது. உண்மையில், அவர்கள் தாம், இருவகைப் பிரிவினரிடமும், இருதளைக்கொள்ளி எறும்பு போல அகப் பட்டு அவஸ்தை படுகிறார்கள். பொருளாதார ரீதியில் முன்னேறி விட்டதால், ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்கின்றனர். வெள்ளையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று கூறுவதும் முறையற்றது. அப்படியென்றால், கருப்பின மக்கள் தாக்கப் பட்டால், எல்லா ஆப்பிரிக்க நாடுகளும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று சொல்வதற்கு இல்லை. ஆக, கருப்பு-வெள்ளை இனத்தவர்களிடம் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அரசு கவனிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். .
தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலை: தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், இந்திய வம்சாவளி மக்கள் தங்களுடைய கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை பாதுகாக்க தனியார் பாதுகாவலர்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தான், மேலும் அபாயத்தில் முடியும்நிலையுள்ளது. ஒருவேளை, அந்நாட்டில் அதற்கு அனுமதி இருக்கலாம். ஆனால், அத்தகைய “தனியார் பாதுகாவலர்கள்,” யார், கருப்பினத்தவரா-வெள்ளையினத்தவரா என்று எடுத்துக் கூற முடியுமா? போலீசாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், ராணுவத்தை அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© வேதபிரகாஷ்
16-07-2021
[1] புதியதலைமுறை, தென்னாப்பிரிக்க கலவரங்களில் குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்… என்னதான் நடக்கிறது?, Web Team Published :15,Jul 2021 08:31 PM
[2] https://www.puthiyathalaimurai.com/newsview/109750/Firstlook-Posters-of-Actor-ashok-selvan-Sila-Nerangalil–Sila-Manidhargal.html
[3] தமிழ்.இந்து, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம்– இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, செய்திப்பிரிவு, Published : 16 Jul 2021 03:11 AM; Last Updated : 16 Jul 2021 06:03 AM.
[4]https://www.hindutamil.in/news/world/693700-attack-on-indians.html
[5] தினமணி, தென்னாப்பிரிக்காவில் வெடித்த கலவரம்..காரணம் என்ன?, By DIN | Published on : 15th July 2021 05:36 PM.
[6] https://www.dinamani.com/world/2021/jul/15/why-south-africa-is-witnessing-worst-violence-3660820.html
[7] NEWS18 TAMIL, மருத்துவமனைக்கு தீ.. கலவரத்தில் 72 பேர் உயிரிழப்பு… தென்னாப்பிரிக்காவில் நடப்பது என்ன? , LAST UPDATED : JULY 15, 2021, 15:51 IST
[8] https://tamil.news18.com/news/international/south-africa-72-death-after-zuma-arrest-worst-violence-in-years-vjr-506005.html
[9] விகடன், தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது‘, `பெருந்தொற்று‘, `வறுமை‘ – உண்மை பின்னணி என்ன?!, வருண்.நா, Published: Today at 4 PM; Updated:Today at 4 PM
[10] https://www.vikatan.com/government-and-politics/international/what-is-the-reason-for-the-south-africa-riots
[11] பாலிமர்.நியூஸ், தென்னாபிரிக்காவில் கலவரம்: 75 பேர் பலி கடைகள் சூறை–தீ வைப்பு, 14 ஜூலை 2021, 10.29.16.AM.